தினமலர் 01.03.2010
சத்துவாச்சாரி நகராட்சி கூட்டம்
வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி நகராட்சி கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் ஜெயலட்சுமி ஏழுமலை தலைமை வகித்தார். செயல் அலுவலர் சண்முகம் வரவேற்றார். துணைத் தலைவர் ஜானகிராமன், கவுன்சிலர்கள் சிவாஜி, சேகர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.நகராட்சி பகுதிகளில் தென்னை மரம், மாமரம் ஏலம் விட வேண்டும். கடை வாடகை பாக்கிப் பணத்தில் வசூலாகாமல் உள்ள பணத்தை தள்ளுபடி செய்வது, புதியதாக அங்கன்வாடி மையம் கட்டுவது, சிமென்ட் சாலை அமைப்பது, ஆழ் துளை கிணறு அமைப்பது, தடுப்பு சுவர் அமைப்பது, ரங்காபுரம் பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கு சுற்றுச் சுவர் அமைப்பது‘ உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.