தினமணி 26.04.2013
சமூக நலக் கூடத்தில் பாத்திரங்களும், நாற்காலிகளும் இலவசம்
சென்னை மாநகராட்சி சார்பில் இயங்கி வரும் பல சமூக நலக் கூடங்களில், ஏழை, எளிய மக்களுக்கு வசதியாக இனி பாத்திரங்களும், நாற்காலிகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இன்று நடைபெறும் மாநகராட்சிக் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் மிகக் குறைந்த வாடகையில் விடப்படும் சமூக நலக் கூடங்களில், பாத்திரங்களும், நாற்காலிகளும் இலவசமாக வழங்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.