தினமணி 10.11.2009
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்வு
சென்னை, நவ. 9: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதை அடுத்து இந்த ஏரிகளில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த ஏரிகளில் திங்கள்கிழமை நிலவரப்படி நீர்மட்டம், இருப்பு, நீர் வரத்து (விநாடிக்கு), மழையளவு விவரம்:
பூண்டி– 133.38 அடி. 1,392 மில்லியன் கன அடி. 1,230 கன அடி. 54.6 மில்லி மீட்டர். சோழவரம்– 55.75 அடி, 360 மி.க. அடி, 653 கன அடி, 50 மி.மீ. செங்குன்றம்– 40.70 அடி, 1,509 மி.க. அடி, 921 கன அடி, 66 மி.மீ. செம்பரம்பாக்கம்– 75.35 அடி, 1,344 மி.க.அடி, 1,556 கன அடி, 98 மி.மீ. கடந்த ஆண்டு…2008 நவம்பர் 9-ம் தேதி இந்த ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 6,117 மில்லியன் கன அடியாக இருந்தது. இப்போது மொத்த நீர் இருப்பு 4,605 மில்லியன் கன அடியாக உள்ளது.