தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அம்மா உணவகத்தில் கூட்டம் அலைமோதுகிறது இட்லி, சாதத்தை ருசித்து சாப்பிட்டனர்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அம்மா உணவகத்தில் நேற்று கூட்டம் அலைமோதியது. இட்லி, சாதத்தை வாங்கி ருசித்து சாப்பிட்டனர்.
அம்மா உணவகம்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை வீடியோ காண்பரன்சிங் மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.நேற்று முதல் முழுவீச்சில் உணவகம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலையில் உணவகத்தில் இட்லி விற்பனை செய்யப்பட்டது. ஒரு இட்லி ரூ.1–க்கு விற்பனை செய்தனர்.
மக்கள் கூட்டம்
இதனால் காலை முதல் உணவகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.பல உணவகங்களில் காலை 8 மணிக்குள் இட்லி விற்று தீர்ந்தது. சில உணவகங்களில் சுமார் 10 மணி வரை விற்பனையானது.நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 882 இட்லி விற்பனையாகி உள்ளது. அதே போன்று மதியம் தயிர்சாதம், சாம்பார் சாதம் விற்பனை நடந்தது. அப்போதும் அனைத்து தரப்பு மக்களும் விரும்பி உணவை வாங்கி சாப்பிட்டனர்.