தினமலர் 26.04.2013
நகராட்சி நிர்வாக ஆணையர் திண்டிவனம் நகரில் ஆய்வு
நகராட்சி நிர்வாக ஆணையர் திண்டிவனம் நகரில் ஆய்வு
திண்டிவனம்:திண்டிவனம் நகரில் குடிநீர் பிரச்னை குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு செய்தார். நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் நடராஜன், நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர் தீனதயாளன் ஆகியோர் திண்டிவனத்தில் நேற்று ஆய்வு செய்தனர்.திண்டிவனம் நகரில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ஆழ்துளை குழாய் கிணறுகளை நேரில் ஆய்வு செய்தனர். பின்பு ரெட்டணை நீரேற்று நிலையத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.திண்டிவனம் நகராட்சி தலைவர் வெங்கடேசன், ஆணையர் அண்ணாதுரை, பொறியாளர் வெங்கடாசலம், மேலாளர் கிருஷ்ணராஜ், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், கவுன்சிலர்கள் பாலச்சந்திரன், முரளிதாஸ் உடன் சென்றனர்.