தின மணி 27.02.2013
நகரில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு
திருவண்ணாமலை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 6 மாடுகளை நகராட்சி அதிகாரிகள் பிடித்தனர்.
நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட், ரமேஷ் கண்ணா தலைமையிலான துப்புரவுப் பணியாளர்கள் திங்கள்கிழமை நகரின் முக்கிய வீதிகளில் சுற்றித் திரிந்த 6 மாடுகளைப் பிடித்தனர்.
இந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.