தினமலர் 07.02.2014
நாளை குடிநீர் வாரிய குறைதீர்வுக் கூட்டம்
குடிநீர் மற்றும் கழிவு நீர் குறித்த பிரச்னைகளுக்கான குறைதீர்ப்புக் கூட்டம் சனிக்கிழமை (பிப்.8) நடைபெற உள்ளது.
இது குறித்து குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி:
குடிநீர் வாரியம் சார்பில் மாதத்தின் 2-ஆவது சனிக்கிழமைகளில் குறைதீர்க்
கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான குறைதீர்க்
கூட்டம் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர் மற்றும் கழிவுநீர் குறித்த பிரச்னைகளை மனுக்கள் வாயிலாக தெரிவிக்கலாம்.
திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, மாதவரம், திரு.வி.க.நகர்,
அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம்,
ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள
குடிநீர் வாரிய பகுதி அலுவலங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
குறைதீர்க் கூட்டம் நடைபெறும்.
ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் குடிநீர் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் குறைதீர்க் கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் 18 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 17
மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.