பேரூராட்சிகளில் துப்புரவாளர் பணி காலியிடங்களுக்குப் பரிந்துரை
சிவகங்கை மாவட்டத்தில் 8 பேரூராட்சிகளில் துப்புரவாளர் பணி காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கி.தொண்டீஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இளையான்குடி பேரூராட்சியில் ஆதிதிராவிடர் (பொது) முன்னுரிமையற்றவர் 1, பிற்ப டுத்தப்பட்டவர் (பொது) முன்னுரிமையுள்ளவர் 1, திருப்பத்தூர் பேரூராட்சியில் எம்.பி.சி (பொது) முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்றவர் தலா 1, பகிரங்கப் போட்டியாளர் (பொது) முன்னுரிமையற்றவர் 2, கண்டனூர் பேரூராட்சியில் பி.சி (பொது) முன்னுரி மையற்றவர் 1, நெற்குப்பை பேரூராட்சியில் எம்.பி.சி முன்னுரிமையுள்ளவர் 1, பகிரங்கப் போட்டியாளர் (பொது) முன்னுரிமையுள்ளவர் 1, பள்ளத்தூர் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் அருந்ததியினர் (பொது) முன்னுரிமையுள்ளவர் 1, திருப்புவனம் பேரூராட்சியில் ஆதி திராவிடர் அருந்ததியினர் (பொது) முன்னுரிமையுள்ளவர் 1, சிங்கம்புணரி பேரூராட்சியில் பகிரங்கப் போட்டியாளர் (பொது) முன்னுரிமையற்றவர் 1, புதுவயல் பகிரங்கப் போட்டியாளர் (பொது) முன்னுரிமையுள்ளவர் 1 என துப்புரவாளர் பணிக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது.
இப்பணியிடங்களுக்கு அந்தந்தப் பேரூராட்சிக்குள்பட்ட முகவரியில் பதிவு செய்து வசித்து வரும் துப்புரவாளர் பணிக்குப் பதிவு செய்த பதிவுதாரர்கள் தங்களுடைய அசல் கல்விச்சான்று, குடும்ப அடையாள அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் 1.3.2013 அன்று நேரில் வந்து பரிந்துரை விவரத்தை தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.