தினமணி 03.09.2013
தினமணி 03.09.2013
மடிப்பாக்கத்தில் விதிமீறல்: கட்டடத்துக்கு சீல்
மடிப்பாக்கத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட
கட்டடத்துக்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ) அதிகாரிகள்
திங்கள்கிழமை (செப்.2) சீல் வைத்தனர்.
இது குறித்து சி.எம்.டி.ஏ. வெளியிட்ட செய்தி: மனை எண் 920 மற்றும் 921,
பஜார் ரோடு, ராம் நகர் விரிவாக்கம், மடிப்பாக்கம் என்ற முகவரியில்
தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 3 குடியிருப்புகளைக் கட்டுவதற்கான
திட்ட அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் திட்ட அனுமதிக்கு முரணாக, அதன் உரிமையாளர் தரைத் தளம் மற்றும்
முதல் தளங்களை வணிகப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தியுள்ளார். மேலும்
அனுமதியின்றி இரண்டாம் தளத்தையும் கட்டி வருகிறார்.
விதிகளுக்குப் புறம்பாக உள்ள அந்தக் கட்டடத்தை மாற்றியமைக்குமாறு
சி.எம்.டி.ஏ தரப்பிலிருந்து அதன் உரிமையாளருக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டது.
ஆனால் அறிவிக்கை கிடைத்த பின்னரும் கட்டடத்தை மாற்றியமைக்காமல், அதனை
வணிகப் பயன்பாட்டுக்காகவே உபயோகப்படுத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து
திங்கள்கிழமையன்று சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அந்தக் கட்டடத்தை பூட்டி சீல்
வைத்தனர்.