மயிலாப்பூர், நந்தனத்தில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து
குடிநீர் குழாய் இணைக்கும் பணி காரணமாக மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஏப்ரல் 15) காலை 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) பகல் 12 மணி வரை குடிநீர் விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குடிநீர் வாரியத்தின் மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பு:-
வேளச்சேரி பகுதியில் பிரதானக் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் ஏப்ரல் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக மயிலாப்பூர், மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், நந்தனம், பள்ளிப்பட்டு, ஆலந்தூர், பம்மல், பல்லாவரம், பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர், நங்கநல்லூர் ஆகிய இடங்களில் அன்றைய தினங்களில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
லாரிகள் மூலம் குடிநீர் பெற, 8144930909, 8144930912, 8144930913 என்ற செல்பேசி எண்களில் பகுதி பொறியாளர்களைத் தொடர்பு கொள்ளலாம்.