தினமலர் 27.08.2012
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளிலும் முடிவு
மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாநகராட்சியில், 23 ஆயிரத்து 531 தெருவிளக்குகள் உள்ளன. அவற்றில், 12 ஆயிரத்து 418 விளக்குகள் தனியார் பராமரிப்பிலும், 11 ஆயிரத்து 113 விளக்குகள் மாநகராட்சி பராமரிப்பிலும் உள்ளன. அரசு, தனியார் கூட்டு ஒப்பந்தம் முறையாக நிறைவேற, ஆறு மாத அவகாசம் தேவை. மின்சேமிப்பு தெருவிளக்கு பராமரிப்பு தொழில்நுட்பத்தை அமல்படுத்த 10 மாத அவகாசம் தேவை.தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாததால், அவ்வளவு நாட்களுக்கு மாநகராட்சியால் தெருவிளக்குகளை பராமரிக்க இயலாது. எனவே, அரசு, தனியார் கூட்டு ஒப்பந்தம் நிறைவேறும் வரை, அனைத்து தெருவிளக்குகளையும், தனியார் பராமரிப்பில் ஒப்படைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 11 ஆயிரத்து 113 விளக்குகளும் ஒராண்டு பராமரிப்புக்காக, தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன, என்றார்.