தினகரன் 16.12.2010
மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரி ஆய்வு
கோவை, டிச. 16: தமிழக அரசின் நகராட்சி நிர்வாகங்களின் கூடுதல் இயக்குனர் சந்திரசேகரன் நேற்று கோவை வந்தார். மாநகராட்சி பிரதனா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், உயர் அதிகாரிகளுடன் வரி வசூல் தொ டர்பாக ஆலோசனை நடத்தினார். அப்போது, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் உடனுக்குடன் நிலுவையின்றி வசூலிக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மாநகராட்சி துணை கமிஷனர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.