தினமலர் 14.10.2010
மாநகராட்சி ஆசிரியர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி
மதுரை
: ஐ.நா., சபையின் நிதி உதவியின் கீழ், தீ விபத்து, மின் கசிவு, வெள்ளம் போன்ற பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இதை செயல்படுத்த உள்ளன. மதுரையில் நேற்று, திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடு கூட்டம் நடந்தது. மாநகராட்சி உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு நடந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) தர்ப்பகராஜ், “”இயற்கை பேரிடர் நிகழும் நேரத்தில், அதை எதிர்கொள்ளும் சூழல் இருக்காது. எனவே, இதுபோல் அமைதியாக இருக்கும் நேரத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிப்பதே புத்திசாலித்தனம்‘” என்றார். திட்ட ஆலோசகர்கள் பாரிவேலன், வனிதா, சுரேஷ் மரியசெல்வம், ஜவகர்லால், மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன், உதவி கல்வி அலுவலர் வெள்ளத்தாய் கலந்து கொண்டனர். இன்று தொண்டு நிறுவனங்களுக்கும், அக்.21ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் பயிற்சி நடக்கிறது.