தினகரன் 14.03.2013
மாநகராட்சி டிரைவர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
மதுரை: மதுரை மாநகராட்சியில் ஆயிரத்து 500 பணியிடம் காலியாக உள்ளது. இதில் 232 பணியிடம் வாரிசு பணிக்கானது. இந்த பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை பணிக்கான ஆணை வழங்கவில்லை. இந்நிலையில் நேற்று மாநகராட்சியில் காலியாக உள்ள 80 டிரைவர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்புக்காக 360 தேர்வர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களின் சான்றிழை மாநகராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அவர்களிடம் சான்றிதழ் நகல் பெறப்பட்டது. இந்த பணியில் கீழ்மட்ட பணியாளர்கள் மட்டும் இருந்தனர். மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை.