தினகரன் 17.05.2013
மாநகராட்சி பகுதியில் பன்றி வளர்த்தால் கடும் நடவடிக்கை
மாநகராட்சி பகுதியில் பன்றி வளர்த்தால் கடும் நடவடிக்கை
கோவை, : கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நாட்டு பன்றிகள் வளர்க்கப்படுகின்றன.
இவைகளால் பொது சுகாதாரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
கோவை மாநகராட்சி மன்ற தீர்மானத்தின்படி (தீர்மான எண் 325, நாள் 27.3.2000), மாநகர எல்லைக்குள் பன்றி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பன்றி வளர்ப்பவர்கள் உடனடியாக பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 15 நாளுக்குள் அப்புறப்படுத்த தவறினால், பன்றி வளர்க்கும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் லதா தெரிவித்துள்ளார்.