தினமணி 18.06.2013
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும்
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆரம்ப மற்றும்
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல்
மற்றும் பணி உயர்வுக்கான கலந்தாய்வுக் கூட்டம், அண்ணா மாளிகையில் ஜூன் 21
ஆம் தேதி நடைபெறுகிறது.
மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால் தலைமையில், அன்றைய தினம் காலை
10.30}க்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், காலை 11.30}க்கு
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பிற்பகல் 12.30}க்கு பட்டதாரி
ஆசிரியர்களுக்கும், பிற்பகல் 3}க்கு ஆரம்பப் பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கும், பிற்பகல் 3.30}க்கு இடைநிலை ஆசிரியர்களுக்கும்
நடைபெறும்.
ஆசிரியர்கள் விண்ணப்பப் படிவத்தை ஜூன் 19 ஆம் தேதிக்குள் அலுவலகத்தில்
சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த ஆசிரியர்கள் மட்டும் பங்கேற்க
அனுமதிக்கப்படுவர். காலிப் பணியிட விவரம் மற்றும் பணிமூப்பு பட்டியல்
மாநகராட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது, என மாநகராட்சி கல்வி அலுவலர்
ஆர். மதியழகராஜ் தெரிவித்துள்ளார்.