மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை மேயர் வழங்கினார்

விழாவில் மாணவ–மாணவிகளுக்கு சீருடை மற்றும் பொருட்களை வழங்கி மேயர் செ.ம.வேலுசாமி பேசும் போது கூறியதாவது:–
தமிழக முதல்–அமைச்சரின் சீரிய திட்டம், கோவை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்படு கிறது. இதன்படி 26 ஆயிரத்து 118 பேருக்கு மாணவர்களுக்கு இவை வழங்கப்படுகிறது. சீருடைகள் மட்டும் 8,711 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படு வதால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் மாணவ–மாணவிகள் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது போல் பிளஸ்–2 தேர்விலும் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளனர். 8 மாநகராட்சி பள்ளிகள் ஐ.எஸ்.ஓ. தரசான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் 9 பள்ளிகளுக்கு தர சான்றிதழ் கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி கூறினார்.
இதில், துணைமேயர் லீலாவதி உண்ணி, மண்டல தலைவர்கள் கே.ஆதிநாராயணன், சாவித்திரி பார்த் திபன், நிலைக்குழு தலைவர்கள் சாந்தாமணி, அர்ச்சுணன், கணேசன், கவுன்சிலர் ரங்கநாயகி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.