தினகரன் 10.12.2010
மாநகரில் வீட்டு வசதி வாரியம் மூலம் துணை நகரங்கள் அமைக்கத் திட்டம் ஜனநெரிசல் கட்டுப்படுத்த நடவடிக்கை
ஈரோடு, டிச. 10: ஈரோடு நகராட்சி கடந்த 2008ம் ஆண்டு முதல் ஈரோடு மாநகராட்சியாக தகுதி உயர்வு பெற்றது. இருப்பினும் ஏற்கனவே இருந்த நகராட்சியில் இருந்த அதே 45 வார்டுகளுடன் மட்டுமே ஈரோடு மாநகராட்சி இயங்கி வருகிறது. ஏற்கன வே திட்டமிட்டபடி அருகாமையிலுள்ள சூரம்பட்டி, காசிபாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர் ஆகிய நகராட்சிகள், பெரியஅக்ரஹாரம், சூரியம்பாளையம் பேரூராட்சிகள், திண்டல், எல்லப்பாளையம், கங்காபுரம், முத்தம்பாளையம், வில்லரசம்பட்டி ஆகிய ஊராட்சி களுடன் ஒருங்கிணைந்த மாநகராட்சியாக மாற்றியமைக்கும் வகையில் மாநகர வடிவமைப்பு திட்டத்தின் மூலம் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரோட்டை சுற்றி லும் துணை நகரங்கள் அமைக்கும் வகையில் குடியிருப்புகள் கட்டுவதற்கான நடவடிக்கையில் வீட்டுவசதி வாரியம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வளர்ந்து வரும் ஈரோடு நகரில் எதிர்காலத்தில் துணைநகரங்கள் அமைக்கும் வகையில் 30 ஆண்டுகளுக்கு முன்பே சம்பத்நகர், முத்தம்பாளையம், மாணிக்கம்பாளையம், பெரியார்நகர் போன்ற பகுதிகளில் காலி இடங்களை வீட்டுவசதி வாரியம் மூலம் விலை கொடுத்து வாங்கி கையகப்படுத்தியது. தற்சமயம் இப்பகுதிகளில் மாடி குடியிருப்பு வீடுகள் அதிகளவில் கட்டி அவற்றை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அரசு குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் காலி வீட்டுமனைகளும் வாரியம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் சம்பத்நகர், மாணிக்கம்பாளையம், பெரியார்நகர் பகுதிகளில் வாரியம் மூலம் அனைத்து வீடுகளும், வீட்டுமனைகளும் விற்பனை செய்யப்பட்டு விட்டன. ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் தற்சமயம் பேஸ்& 5 வரையிலும் குடியிருப்புகள் கட்டித்தரப்பட்டு அவற்றை உரிய மனைதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக ‘பேஸ்& 6, பேஸ்&7 மற்றும் பேஸ்&8‘ ஆகிய மூன்று பகுதிகளிலும் வீட்டு வசதி வாரியத்திற்கு