மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்பு ‘கட்
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சியில் வீடுகள், வணிக நிறுவனங்களில் குடிநீர் இணைப்பு குழாய்க ளில் மின் மோட்டார் பொ ருத்தி தண்ணீர் எடுத்தால் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி எச்சரித்துள் ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சிராஜூதீன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருமங்கலம் நகராட்சி பகுதிகளிலுள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகளில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுக்க ஏற்கனவே தடையுள்ளது. நகர் பகுதியில் சீரான முறை யில் குடிநீர் வழங்குவதை தடுக்கும் வகையில் குடிநீர் இணைப்பில் மின் மோட் டார் பொருத்தியிருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
ஒரு சில பகுதிகளில் குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக மோட்டார் பொருத்தியவர் கள் அவற்றை அகற்றி விடவேண்டும். தவறும் பட்சத் தில் பறிமுதல் செய்யப்படுவதுடன் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அவர்களு க்கு அபராதம் விதிக்கப் படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.