தினமலர் 27.07.2012
விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்ய ஆதாரம்: விவரம் சேகரிக்கிறது சி.எம்.டி.ஏ.,
வழக்கு தாமதமாகிறது:இதையடுத்து, இவ்வழக்கு, நேற்று முன்தினம் (ஜூலை 24ம் தேதி) விசாரணைக்கு வரும். முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என, பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தனர்.ஆனால், அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், தலைமை நீதிபதியை அணுகி, தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும்; வழக்கு விசாரணையில் ஆஜராக கால அவகாசம் தேவைப்படுவதாகவும் கேட்டுக் கொண்டார். கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை, செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைத்தனர்.
கடிதங்கள் குறித்து ஆய்வு செய்த சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், ஆகஸ்ட் 13ம் தேதி, கண்காணிப்புக் குழு கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின் எழுந்துள்ள சூழல் குறித்து, இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இவ்வாறு, தங்களுக்கு தெரிந்த நிலையில் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்களின் முகவரிக்கு, சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் இருந்து கடிதங்கள் அனுப்பப் பட்டு வருகின்றன.
அதில், “”உங்கள் கட்டடம், 2007ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்டதா? அதற்கான ஆதாரங்களை, ஒரு வாரத்துக்குள் சி.எம்.டி.ஏ.,வுக்கு அனுப்ப வேண்டும். உங்கள் கட்டடத்தின் தற்போதைய நிலை, அதன் வரைபடம் போன்ற ஆவணங்களையும், இத்துடன் அனுப்ப வேண்டும்,” என, குறிப்பிட்டு உள்ளதாக சொல்லப் படுகிறது.விதிமீறல் கட்டடங்கள் என பட்டியலிடப்பட்ட அனைத்து கட்டடங்களுக்கும், ஆரம்பகட்ட விவர சேகரிப்புக்காக, இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.- நமது நிருபர் –