தினமணி 14.12.2009
விழிப்புணர்வு பிரசாரப் பேரணி
திருவாடானை,டிச. 13: திருவாடானை தாலுகா தொண்டியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரப் பேரணி நடைபெற்றது,
தொண்டி பேருராட்சித் தலைவர் பாலுச்சாமி தலைமை வகித்தார். தொண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, தொண்டி அரசு மருத்துவமனையை வந்தடைந்தது பேரணி. பின்னர் தொண்டி வட்டார மருத்துவ அலுவலர் துரைசாமி, தொழுநோய் விழிப்புணர்வு பற்றி பேசினார். இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.