தினகரன் 26.12.2009
குடியிருப்பு பகுதியில் ரூ.10 லட்சத்தில் பூங்கா
பெரம்பலூர்: பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியிலுள்ள அரசு அலுவலர் குடியிருப்புப் பகுதியில் பெரம்பலூர் நகராட்சியின் பொதுநிதியில் இரண்டு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடுவில் 10 அடி உயரத்தில் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சித் தலைவர் இளையராஜா பார்வையிட்டார். அப்போது, இந்த பூங்காக்கள் வரும் 1ம்தேதி குடியிருப்போரின் பயன்பாட்டுக்கு விடப்படும். இங்கு குடியிருப்போர் பூங்காவை சுத்தமாகப் பராமரிக்க வேண் டும் என் றார். நகராட்சிப் பொறியாளர் மணி மாறன், ஆய்வாளர் மருதுபாண்டியன் உடனிருந்தனர்.