தினமணி 19.05.2013
மாதவரம் மண்டலத்தில் ரூ.10 கோடியில் வளர்ச்சிப் பணி
சென்னை மாநகராட்சியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட மாதவரம் மண்டலத்தில் உள்ள கதிர்வேடு, புத்தகரம் பகுதியில் 24, 25-வது வார்டுகளில் நவீன தரமிக்க தார்சாலை, மழைநீர் கால்வாய் அமைக்க ரூ.10 கோடியே 1 லட்சத்து 21 ஆயிரம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மாதவரம் மண்டலத்தில் ரூ.10 கோடியில் வளர்ச்சிப் பணி
சென்னை மாநகராட்சியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட மாதவரம் மண்டலத்தில் உள்ள கதிர்வேடு, புத்தகரம் பகுதியில் 24, 25-வது வார்டுகளில் நவீன தரமிக்க தார்சாலை, மழைநீர் கால்வாய் அமைக்க ரூ.10 கோடியே 1 லட்சத்து 21 ஆயிரம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார். மாதவரம் மண்டலகுழு தலைவர் தி.வேலாயுதம் வரவேற்றார். பால்வளத்துறை அமைச்சர் வி.மூர்த்தி பணியைத் தொடங்கி வைத்தார்.
கவுன்சிலர்கள் கண்ணதாசன் சுப்பிரமணி, வதனா பர்னபாஸ், சங்கர், மற்றும் கதிர்வேடு விஜயன், புழல் ஏழுமலை உள்பட மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.