தினமணி 03.10.2013
100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட கடைகளில் 100 கிலோ எடைகொண்ட பிளாஸ்டிக் பைகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
- திருத்தணி நகராட்சியில் பிளாஸ்டிக் பைகள், கப்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
- இந்நிலையில் நகராட்சிக்குள்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- இதன்பேரில்
நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம், துப்புரவு ஆய்வாளர் லட்சுமி கணேசன்
தலைமையிலான அலுவலர்கள் புதன்கிழமை அங்குள்ள கடைகளில் திடீர் சோதனை
மேற்கொண்டனர்.
- திருத்தணி – அரக்கோணம் சாலை, கந்தசாமி தெரு, சன்னதி தெரு, பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- இதில் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ எடைகொண்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- இனி
இது போன்ற பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது
கண்டுபிடிக்கப்பட்டால், கடைகளுக்கு சீல் வைப்பு, அபராதம் உள்ளிட்ட
நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆணையர் கடுமையாக எச்சரித்தார்.