தினகரன் 04.02.2010
முதல்வர் அறிவித்தபடி செவிலிமேடு பேரூராட்சிக்கு ரூ.1.2 கோடி நிதி ஒதுக்கீடு
காஞ்சிபுரம்: அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு காஞ்சிபுரம் வந்திருந்த முதல்வர் கருணாநிதி, செவிலிமேடு பேரூராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு அறிவித்தார்.
அதன்படி, பல்லவன்நகர் பூங்கா அழகுப்படுத்தும் பணிக்காக ரூ.22 லட்சமும், கன்னிகாபுரத்தில் சிமென்ட் சாலை அமைக்க ரூ.4 லட்சமும், காமராஜர் தெருவில் சிமென்ட் சாலை அமைக்க ரூ.5 லட்சமும், சர்க்யூட் ஹவுஸ் பின்புறம் மற்றும் மிலிட்டரி ரோடு ஜங்ஷன் ஆகிய இடங்களில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க ரூ.8 லட்சம், திருப்பருத்திகுன்றத்தில் மழைநீர் கால்வாய் அமைக்க ரூ.60 லட்சம் என ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா, செவிலிமேடுக்கு நேற்று வந்தார். கன்னிகாபுரம் மற்றும் பல்லவன்நகர் பூங்கா ஆகிய இடங்களில் நடக் கும் பணிகளை பார்வையிட்டார். பணிகளை விரைவில் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பேரூராட்சி தலைவர் ஏழுமலை, துணைத்தலைவர் விஸ்வ நாதன், செயல் அலுவலர் ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் முரளிதரன் உட்பட பலர் உடன் வந்திருந்தனர்.