மாலை மலர் 21.10.2010
குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களுக்கு ரூ
.1.57 கோடி போனஸ்: கருணாநிதி உத்தரவு
சென்னை
, அக். 21-தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்களில் மாதம்
9300-34800 ஊதியத்துடன் ரூ. 4,300 தர ஊதியம் பெறும் பதவிகளில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு போனஸ் சட்டத்தின்படி சம்பள உச்சவரம்பிற்கு விலக்களித்து, 2009-2010 ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதன்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்களுக்கு
8.33 சதவீதம் போனஸ் வழங்கிட முதல்– அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.இந்த ஆணையின்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும்
4 ஆயிரத்து 493 பணியாளர்களுக்கு ரூ. 1 கோடியே 57 லட்சம் போனஸ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.