தினமலர் 26.05.2010
180 பேருக்கு நியமன உத்தரவு : துணை முதல்வர் வழங்கினார்
சென்னை : சென்னை மாநகராட்சியில் பணியில் இருந்த போது உயிரிழந்த 168 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை, துணை முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார். அத்துடன் வாழ்த்து தெரிவித்து பாராட்டு கடிதங்களையும் அவர்களிடம் கொடுத்தார். இவர்களில் 166 பேர் தூய் மைப் பணியாளர் களாகவும், இரண்டு பேர் டைபிஸ்ட்களாகவும் நியமிக்கப் பட்டுள்ளனர். இதுதவிர, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சுகாதார ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்ட 12 பேருக்கும் நியமன உத்தரவுகளையும், வாழ்த்து கடிதங்களையும் துணை முதல்வர் வழங்கினார். இதன்படி, கடந்த மூன்றரை ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியில் 1,216 பேருக்கு கருணை அடிப்படையில் நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில், மேயர் சுப்ரமணியன், நகராட்சித் துறை முதன்மைச் செயலர் நிரஞ்சன் மார்டி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.