வேளச்சேரியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ. 2.25 கோடி நிலம் மீட்பு
சென்னை, டிச.17: வேளச்சேரி, 153வது வார்டு வி.ஜி.பி. செல்வாநகரில் மாநகராட்சிக்கு சொந்தமான 1,800 சதுர அடி கொண்ட சாலையோர நிலமும், 3,600 சதுர அடி கொண்ட பூங்கா நிலமும் இருந்தது. இதை எஸ். சங்கரி, ஏ.வி. சண்முகம், மு. வரதராஜ், ம. கோட்டைசாமி, கி. சுப்பிரமணி, கே. கோமளா, மு. ராமசாமி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து வேறு ஒரு சொத்து சம்பந்தப்பட்ட பத்திர பதிவு எண்ணை பயன்படுத்தி போலி பத்திரம் தயார் செய்து, பிற நபர்களுக்கு விற்பனை செய்தது விஜிலென்ஸ் அதிகாரிகள் மூலம் கண்டறியப்பட்டது.
இதையடுத்து 5,400 சதுர அடி நிலமும் உடனடியாக கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 2.25 கோடி.
போலி பத்திரம் தயார் செய்து மாநகராட்சி நிலத்தை விற்பனை செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி வேளச்சேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.