தினமணி 27.07.2013
தினமணி 27.07.2013
குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களுக்கு ரூ. 2.99 கோடியில் இயந்திரங்கள்
கழிவுநீரை அகற்றப் பயன்படுத்தப்படும் ஜெட்ராடிங்
இயந்திரம் மற்றும் தூர்வாரும் இயந்திரங்களை சென்னைக் குடிநீர் வாரியத்தின்
பகுதி அலுவலகங்களுக்கு தமிழக நகராட்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி
வெள்ளிக்கிழமை வழங்கினார்.
சென்னைக் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களுக்கு கழிவுநீர் அகற்றப்
பயன்படுத்தும் ஜெட்ராடிங் இயந்திரங்களை வழங்கும் நிகழ்ச்சி குடிநீர் வாரிய
தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.
இதில், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி
பங்கேற்று ரூ. 2.99 கோடி மதிப்பில் 7 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 12
தூர்வாறும் இயந்திரங்களை வழங்கினார்.
இந்த இயந்திரங்கள் ராயபுரம், தியாகராய நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி,
வில்லிவாக்கம், பெரம்பூர் மற்றும் எழும்பூர் பகுகளில் உள்ள கழிவுநீர்கள்
அகற்றப் பயன்படுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
செயலர் க. பனீந்திரரெட்டி, சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் பி.
சந்திர மோகன், பொறியியல் இயக்குநர் டி.வி. பிரபாகர் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.