தினத்தந்தி 12.02.2014
பொள்ளாச்சி, உடுமலை சட்டமன்ற தொகுதிகளில் புதிதாக 3 குடிநீர்
திட்டங்களுக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
தகவல்

பொள்ளாச்சி, உடுமலை சட்டமன்ற தொகுதியில் புதிதாக 3 கூட்டுகுடிநீர்
திட்டங்களுக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா ரூ.80 கோடிநிதி ஒதுக்கி உள்ளார்
என்று துணை சபாநாயகர் பொள் ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
குடிநீர் பிரச்சினை
பொள்ளாச்சி அருகே குறுஞ்சேரியில் நடந்த விலை யில்லா மிக்சி, கிரைண்டர்,
மின்விசிறி வழங்கும் விழாவில் துணை சபாநாயகர் பொள் ளாச்சி ஜெயராமன் பேசும்
போது கூறியதாவது:–
முதல்–அமைச்சர் ஜெயல லிதா கிராமப்புற மக்களின் குடிநீர் பிரச்சினையை
தீர்க் கும் வகையில் 2005–ம் ஆண்டு ரூ.55 கோடியில் அம்பராம் பாளையம்
ஆழியாற்றிலிருந்து 295 கிராமங்களுக்கானகூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்
பாட்டிற்கு கொண்டு வந்தார். இதன் மூலம் பொள்ளாச்சி தெற்கு, வடக்கு,
கிணத்துக் கடவு, குடிமங்கலம் ஆகிய ஒன்றிய பகுதி மக்கள் பயன் பட்டனர். இதைத்
தொடர்ந்து ஆட்சி மாற்றம் காரணமாக குடிநீர் திட்டம் சரியாக பரா மரிக்கப்பட
வில்லை.
26 ஊராட்சிகள்
அ.தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றவுடன் முதல்–அமைச்சர் ஜெயலலிதா குடிநீர்
திட்டங் களை பராமரிக்க புதிய குடி நீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி
உள்ளார். ஏற்கனவே உள்ள 295 கிராமங்களின் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் கடை
கோடியில் உள்ள குடிமங்கலம் ஒன்றியப்பகுதி களுக்கு குடிநீர் வழங்கவும்,
உடுமலை ஒன்றியத்தில் குறுஞ்சேரி, சின்ன வீரம்பட்டி, பெரிய கோட்டை ஆகிய
கிராமங்கள் உள்பட 26 ஊராட்சிகள் பயன்படும் வகையில் திருமூர்த்தி அணை
யிலிருந்து ரூ.56.66 கோடியில் தனி குடிநீர் திட்டத்திற்கு முதல்–அமைச்சர்
நிதி ஒதுக்கி உள்ளார்.
இத்திட்டம் மூலம் தினசரி 1 கோடியே 3 லட்சத்து 500 லிட் டர் குடிநீர்
கிடைக்கும். ஏற் கனவே இருந்த குடிநீர் திட் டத்தில் தினசரி 55 லட்சம்லிட்
டர் தண்ணீர் தான் கிடைத்து வந்தது.
63 கிராமங்கள்
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு ரூ.7 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில்
தனியாக கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வரு கிறன்றன. இதன் மூலம்
தினசரி 28 லட்சத்து 61 ஆயிரம் லிட் டர் தண்ணீர் கிடைக்கும். ஜமீன்
ஊத்துக்குளி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.15 கோடியே 47 லட்சம் நிதி
ஒதுக் கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் திட்டத்தில் ஜமீன் ஊத்துக்குளி
பேரூராட்சி, தெற்கு ஒன்றி யத்தில் மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, சின்
னாம்பாளையம், சோல பாளையம், வடக்கு ஒன்றி யத்தில் ஜமீன்முத்தூர், ஆச்சி
பட்டி, திப்பம்பட்டி, புளியம் பட்டி ஆகிய 8 ஊராட்சி பகுதிகளில் 63
கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கும். இதன் மூலம் 50 ஆயிரம் மக்கள்பயன் அடை
வார்கள். தினசரி 29 லட் சத்து 28 ஆயிரம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்
படும்.
இந்த 3 தனி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.80 கோடி நிதியை
முதல்–அமைச்சர் ஒதுக்கி உள்ளார். இந்த 3 குடிநீர் திட்டங்கள் மூலம் தின சரி
1 கோடியே 60 லட்சம் லிட் டர் குடிநீர் கிடைக்கும். குடி நீர் திட்டம்
செம்மை படுத்தும் திட்டத்தில் 2013– 14–ம் ஆண்டிற்கு ரூ.2 கோடியே 10 லட்சம்
மதிப் பீட்டில் புதிய மின் மோட்டார் கள் ஜமீன் ஊத்துக்குளி, வடுக பாளையம்,
குளத்தூர் ஆகிய 3 நீருந்து நிலையங்களில் பொருத் தப்படுகின்றன. இந்த
திட்டங் கள் பயன்பாட்டிற்கு வரும் போது பொள்ளாச்சி, உடு மலை,
கிணத்துக்கடவு, சட்ட மன்ற தொகுதிகளில் அனைத்து கிராமங்களிலும்
பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். இவ்வாறு துணை சபா நாயகர் பொள்ளாச்சி
ஜெய ராமன் கூறினார்.