தினமலர் 03.04.2013
மதுரை, நெல்லை மாநகராட்சியில்384 பேருக்கு கருணை வேலை
சென்னை:மதுரை மாநகராட்சியில், 348 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.மதுரை மாநகராட்சியில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் இறந்த, 347 பணியாளர்களின் வாரிசுகள், நெல்லை மாநகராட்சியில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இறந்த, 37 பேரின் வாரிசுகள் என, மொத்தம், 384 வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை, கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.இளநிலை உதவியாளர், தேர்ச்சி திறன் பணியாளர், தேர்ச்சி திறனற்ற பணியாளர், துப்புரவு பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் என, பணிகள் வழங்கப்பட்டுள்ளன.