தினமணி 09.03.2013
செய்யாறு நகராட்சியில் ரூ.3.90 லட்சம் வசூல்
செய்யாறு நகராட்சியில் ரூ.3.90 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று ஆணையர் பி.கே.ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு இனங்களின் மூலம் ரூ.3.90 லட்சம் வசூல் செய்யப்பட்டது. இப்பணியில் வருவாய் ஆய்வாளர் ப.சிவானந்தகுமார், சமுதாய அமைப்பாளர் சு.ந.அம்பேத்கர், இளநிலை உதவியாளர்கள் எஸ்.நடராசன், எம்.ரியாஷ்கான் மற்றும் அலுவலக பணியாளர்கள் பலரும் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.