தினகரன் 17.06.2013
காவிரியில் வெள்ள காலத்தில் குழாய்கள் சேதம் தடுக்க ரூ.4.95 கோடியில்
திட்டம் முசிறியில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை
முசிறி,
: முசிறியில் காவிரி ஆற்றில் வெள்ள காலத்தில் குடிநீர் குழாய்கள் அடித்து
செல்லப்படு வதை தடுக்க ரூ.4.95 கோடி யில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
திருச்சி
மாவட்டம் முசிறி காவிரி ஆற்றில் போர்வெல் கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலம்
மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மழை காலத்தில்
வெள்ளம் ஏற்பட்டால் போர்வெல் லில் இருந்து ஆற்றின் கரை க்கு குடிநீர்
எடுத்து வரும் குழாய்கள் அடித்துச் செல்லப்படுவதும், அந்த சமயத்தில்
முசிறி நகர மக்கள் குடிநீருக்காக சிரமப்படுவதும் வழக்கமாக இருந்து
வருகிறது.
பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் இந்த பிரச்னைக்கு
நிரந்தர தீர்வு காண வலியுறுத்தினர். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவிடம்
எம் எல்ஏ சிவபதி கோரிக்கை விடுத்தார்.
அதற்கான திட்ட மதிப்பீடு ரூ.4.95
கோடியில் தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வெள்ள
காலங்களில் குழாய்கள் அடித்து செல் லாத வகையில் சிறிய அள வில் தூண்கள்
அமைத்து அதன் மேல் குழாய்கள் கொண்டு செல்லப்பட உள் ளது. மேலும் தண்ணீரை
உறிஞ்சுவதற்கு அதிக திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட உள்ளது.
இந்நிலையில்
தற்போது நிலத்தடி நீர் மட்டம் மேலும் குறைந்து விட்ட தால், முசிறி
பகுதியில் குடி நீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே எம்.எல்.ஏ. சிவபதி
நேற்றுமுன்தினம் காவிரி ஆற்றுக்கு சென்று, அங்கு கூடுதலாக போர்வெல் கிணறு
அமைப்பது பற்றி பேரூராட்சி அலுவலர்களு டன் ஆலோசனை நடத்தினார். மேலும்
ரூ.4.95 கோடியில் திட்டப்பணிகள் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள
இடத்தையும் சிவபதி பார்வையிட்டார்.
முசிறி பேரூராட்சி தலைவர்
மாணிக்கம், அதி முக ஒன்றிய செயலாளர் கள் முசிறி ராஜமாணிக் கம், தா.பேட்டை
ஜெயம், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் மார்க்கெட்ராஜ், நகர
எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் குட்டி ஜெயசீலன், தா. பேட்டை முன்னாள்
நகர செயலாளர் முனுசாமி, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.