தினத்தந்தி 16.04.2013
கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் ரூ.50 லட்சம் செலவில் புதிய தார் சாலை
திருப்பூர் மாவட்டம் கொளத்துப்பாளைம் பேரூராட்சியில் நகர்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.50 லட்சம் செலவில் கருங்காளிவலசு காலனியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை பேரூராட்சி தலைவர் இந்துமதி தங்கவேல் நேற்று ஆய்வு செய்தார். பேரூராட்சி செயல் அலுவலர் மணிச்சாமி, வார்டு உறுப்பினர் மனோகரன் மற்றும் இளநிலை பொறியாளர் ஆகியோர் உடன் சென்றனர்.