மாலை மலர் 23.12.2013

சென்னை, டிச. 23 – தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
அனைத்து
மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தேவையான அளவு வழங்கப்பட வேண்டும்
என்பதும், மக்களின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதும்
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசின் நோக்கமாகும்.
இந்த
உயரிய நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில், விழுப்புரம் நகராட்சி குடிநீர்
அவிவிருத்தித் திட்டம் 9 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு நபர்
ஒருவருக்கு 90 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.
இதன்
மூலம் 95,439 பேர் பயனடைவார்கள். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால்
விழுப்புரம் நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் அபிவிருத்தித்
திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து
வைத்தார்.
மேலும், ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் பேரூராட்சியில்
10,772 பேர் பயனடையும் வகையில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள்
ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர்
வழங்கும் குடிநீர் அபிவிருத்தித் திட்டம்; திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
உப்பிலியாபுரம் பேரூராட்சியில் 7,000 பேர் பயனடையும் வகையில் 24 லட்சத்து
90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர்
வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர் அபிவிருத்தித் திட்டம்;
திருவண்ணாமலை
மாவட்டம், அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தாமூர் மற்றும் 27
குடியிருப்புகளில் 13,756 பேர் பயனடையும் வகையில் 1 கோடியே 85 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம்
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;
காஞ்சீபுரம்
மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேலமையூர் மற்றும் 12
குடியிருப்புகளில் 7,357 பேர் பயனடையும் வகையில் 97 லட்சத்து 50 ஆயிரம்
ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம்
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;
வேலூர்
மாவட்டம், வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட சுமைதாங்கி மற்றும் 13
குடியிருப்புகளில் 11,231 பேர் பயனடையும் வகையில் 99 லட்சத்து 72 ஆயிரம்
ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம்
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;
கன்னியாகுமரி
மாவட்டத்தில், 1,86,347 பேர் பயனடையும் வகையில் 16 கோடியே 70 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம்
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் மேல்புரம் ஒன்றியத்தைச் சேர்ந்த
79 குடியி ருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் களியக்கா
விளை, கொல்லங் கோடு, மேல்புரம் ஆகிய மூன்று கூட்டுக் குடிநீர்த்
திட்டங்களுக்கான ஒருங்கி ணைந்த சுத்திகரிப்பு நிலையம்; என மொத்தம் 21
கோடியே 47 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள
குடிநீர்த் திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்து,
கன்னியாகுமரி மாவட்டத் திலுள்ள மூன்று கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்த
நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள்
மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, தலைமைச் செயலாளர்
ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச்
செயலாளர் கே.பணீந்திர ரெட்டி, நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த்
பி.காம்ப்ளே, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குநர்
விஜயராஜ்குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.