தினத்தந்தி 19.04.2013
நெல்லை மீனாட்சிபுரம் பள்ளியில் 750 மாணவிகளுக்கு இலவச புத்தக பைகள் துணை மேயர் ஜெகநாதன் வழங்கினா
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, தமிழக அரசு திட்டத்தின் கீழ் நேற்று இலவச புத்தக பை வழங்கும் விழா நடந்தது.
விழாவுக்கு பள்ளிக்கூட தலைமை ஆசிரியை நாராயண சுந்தரி தலைமை தாங்கினார். தச்சை மண்டல தலைவர் தச்சை மாதவன் முன்னிலை வகித்தார். துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன் கலந்து கொண்டு, 750 மாணவிகளுக்கு இலவச புத்தக பைகளை வழங்கினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.