மாலை மலர் 18.08.2010
ரூ.9 கோடி செலவில் 13 மயான பூமிகள் நவீன மயமாகிறது; மேயர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஆக. 18- சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று நியூ ஆவடி சாலையில் உள்ள வேளங்காடு மாநகராட்சி மயான பூமியினை ஆய்வு செய்தார். அப்போது கூறியதாவது:-
சென்னை மாநகராட்சி பொதுமக்களின் சேவைக்காக இலவசமாக சடலங்கள் எரிப்பதும், தேவையான குளிர்சாதனப் பெட்டிகள், அமரர் ஊர்திகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பொது மக்கள் இச்சேவைக்காக 1913 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் ஜி.கே.எம். காலனியில் உள்ள மயானபூமி ரூபாய் 77.35 லட்சத்திலும், விருகம்பாக்கம் மயான பூமி ரூபாய் 71.54 லட்சத்திலும், அரும்பாக்கம் மயான பூமி ரூபாய் 74.31 லட்சத்திலும், நுங்கம்பாக்கம் மயான பூமி ரூபாய் 74.73 லட்சத்திலும், கண்ணம்மா பேட்டை மயான பூமி ரூபா 70.08 லட்சத்திலும், வேளச்சேரி மயான பூமி ரூபாய் 65.60 லட்சத்திலும், கானகம் தரமணி மயான பூமி ரூபாய் 76.71 லட்சத்திலும் என 7 மயான பூமிகள் மின்சார தகன மேடைகள் அமைக்கப்பட்டு, நவீன மயமாக்கும் பணிகள் ரூபாய் 5 கோடியே 10 இலட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோன்று கொடுங் கையூர் மயான பூமி ரூபாய் 66.27 லட்சத்திலும், மேல்பட்டி பொன்னப்பன் தெருமயான பூமி ரூபாய் 66.76 லட்சத்திலும், வில்லிவாக்கம் மயான பூமி ரூபாய் 66.24 லட்சத்திலும், கோட்டூர் மயான பூமி ரூபாய் 66.11 லட்சத்திலும், கிண்டி அருளாயம்பேட்டை ரூபாய் 66.10 லட்சத்திலும், வேளச்சேரி மயான பூமி ரூபாய் 65.36 லட்சத்திலும் என 6 மயான பூமிகளில் எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்பட்டு, நவீன மயமாக்கும் பணிகள் ரூபாய் 3 கோடி 97 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. ஆக மொத்தம் 13 மயான பூமிகள் ரூபாய் 9 கோடியே 7 லட்சம் செலவி நவீன மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் ஒன்றரை மாதத்தல் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பொதுமக்கள் மயான பூமிகளுக்கு வரும் போது அங்குள்ள பசுமையான சூழ்நிலையை கண்டு மன துயரத்தை மறந்து இயற்கை சூழலை காணும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் (சுகாதாரம்) மணி வேலன், துணை ஆணையர் (சுகாதாரம்) ஜோதி நிர்மலா, மன்ற உறுப்பினர் ஏழுமலை கலந்து கொண்டனர்.