தினகரன் 19.08.2010
ஸி9 கோடி செலவில் மின், எரிவாயு மேடையுடன் 13 மயானங்கள் நவீனமயம்
சென்னை, ஆக.19: சென்னையில் 13 மயானங்கள் ஸி9 கோடியில் நவீனமயமாக்கப்படுகிறது என்று மேயர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.
நியூ ஆவடி சாலையில் உள்ள வேளங்காடு மாநகராட்சி மயான பூமியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறிய தாவது:
மாநகராட்சி பராமரிப் பில் உள்ள மயான பூமிகளில் சடலங்கள் எரிப்பதற்கு கட்டணம் எதுவும் வசூலிப் பது இல்லை. இந்த சேவை இலவசமாக செய்யப்படு கிறது. இது தவிர குளிர் சாதனப் பெட்டிகள், அமரர் ஊர்திகள் ஆகிய சேவை களையும் மாநகராட்சி இலவசமாக வழங்கி வருகிறது. மாநகராட்சி தொலைபேசி 1913 எண்ணை தொடர்பு கொண்டு இந்த சேவைகளை பொதுமக்கள் பெற்றுவருகின்றனர்.
மயான பூமிகளை நவீனமயமாக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன் படி, ஜி.கே.எம். காலனியில் உள்ள மயான பூமி ஸி77.35லட்சத்திலும், விருகம்பாக்கம் மயான பூமி ஸி71.54 லட்சத்திலும், அரும்பாக்கம் மயானபூமி ஸி74.31 லட்சத்திலும் நுங்கம்பாக்கம் மயானபூமி ஸி74.73 லட்சத்திலும், கண்ணம்மாபேட்டை மயான பூமி ஸி70.08 லட்சத்திலும், வேளச்சேரி மயானபூமி ஸி65.60 லட்சத்திலும், கானகம் தரமணி மயானபூமி ஸி76.71 லட்சத்திலும் என 7 மயான பூமிகள் ஸி5.1 கோடி செலவில் நவீனமாக்கப் படுகிறது. மின்தகன மேடைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. கொடுங்கையூர், வில்லிவாக்கம், கோட்டூர் உள்பட 6 மயானபூமிகள் ஸி3.97 கோடி செலவில் எரிவாயு தகன மேடை களுடன் நவீனமாக்கும் பணி மேற்கொள்ளப்படு கிறது. இந்த பணிகள் ஒன்றரை மாதத்தில் முடிக்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.