மாலை மலர் 13.10.2010
உண்மையான பயனாளிகளுக்கு விரைவில் கடைகள் ஒதுக்கப்படும் மேயர் மா
.சுப்பிரமணியன் தகவல்சென்னை
, அக். 13- சென்னை மாநகராட்சி மேயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-சென்னை மாநகரில் சாலையோர வியாபாரி களுக்கான வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன
.எழும்பூர் ரெயில் நிலையம் எதிரிலும், சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரிலும், பூங்கா இரயில் நிலையம் அருகிலும், விக்டோரியா பப்ளிக் ஹால் சுற்றியிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் அகற்றப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அல்லிக்குளம் வளாகத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதேபோல் தியாகராயநகரில் உள்ள தியாகராய சாலை, உஸ்மான் சாலை, சிவப்பிரகாசம் சாலை ஆகிய சாலைகளில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு பாண்டி பஜாரிலும், அயனாவரம் பாலவாயல் மார்க்கெட் சுற்றியுள்ளவர்களுக்கு அதன் அருகாமையிலும், ராயபுரம் மணியக்கார சத்திரத்தெருவில் நடைபாதை வியாபாரிகளுக்கு அந்தப் பகுதியிலும் ஹாக்கின்ஸ் கமிட்டி தலைவர் நீதிபதி ராமமூர்த்தியின் ஆணைப்படி வணிக வளாகங்கள் கட்டப்பட்டது.
துணை முதல்
– அமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 வணிக வளாகங்ளையும் திறந்து வைத்தார். ராயபுரம் மணியக்கார சத்திரத்தெருவில் 117 பேர்களுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டதில் சில புகார்கள் வந்ததன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி விழிப்புப்பணி அலுவலர் மூலம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் நேரிடையாக ஆய்வு செய்து, அதில் 101 பேர்கள் மட்டுமே உண்மையான பயனாளிகள் என தெரிய வந்துள்ளது. அதில் 16 பேர்கள் கடைகளே இல்லாதவர்கள் என கண்ட றியப்பட்டுள்ளது.அதே போன்று
, பாண்டிபஜாரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் அயனாவரம் பாலவாயல் சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகங்களின் உண்மையான பயனாளிகள் விழிப்புப்பணி அலுவலர் மூலம் அந்த அந்த பகுதி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆய்வு செய்து, பட்டியல் தேர்வு செய்து, ஹாக்கின்ஸ் கமிட்டி நீதிபதி ராம மூர்த்தியிடம் சமர்ப்பிக்கப்படும்.அவர்கள் முன்னிலையி லேயே பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்
. மீதமுள்ள கடைகள் அவரிடம் அனுமதி பெற்று, திறந்தவெளி ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.சென்னை மாநகராட்சி கட்டியுள்ள வணிக வளாகங்கள் எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு ஒருபோதும் சேர வாய்ப்பு இல்லாத வகையில் உண் மையான பயனாளிகளுக்கு கடைகள் கிடைத்திட உரிய வழிவகைகள் உறுதியாக மேற்கொள்ளப்படும்
. இதில் எந்தவித குறைபாடுமின்றியும், கால தாமதமின்றியும், உரிய வழிமுறைகளின்படி கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.இதன் மூலம் அந்தப் பகுதிகளில் உள்ள சாலை களில் பொதுமக்கள் எந்தவித சிரமுமின்றி செல்வதற்கு சென்னை மாநகராட்சி வழிவகுக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்
. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.