தினமலர் 03.02.2011
துப்புரவு பணியை ஆய்வு செய்ய குழு: மேயர் தகவல்
சென்னை : “”ஐகோர்ட் உத்தரவுப்படி, இந்த ஆண்டு இறுதி வரை, “நீல் மெட்டல் பனால்கா’ நிறுவனம், துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும். இதை ஆய்வு செய்ய கவுன்சிலர்கள், அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும்,” என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.சென்னை மாநகராட்சி கூட்டம் முடிந்த பின், மேயர் சுப்ரமணியன் கூறியதாவது:சென்னை மாநகராட்சியின் புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய நான்கு மண்டலங்களில், “நீல் மெட்டல் பனால்கா’ நிறுவனம் துப்புரவு பணி செய்கிறது. மாநகராட்சியுடனான ஒப்பந்தப்படி, இந்நிறுவனம் ஏழு ஆண்டுகள் துப்புரவு பணி செய்ய வேண்டும். ஆனால், அந்நிறுவனம் சரியாக துப்புரவு பணியை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.அந்த நிறுவனம் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், “இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை, அவர்கள் துப்புரவுப் பணி மேற்கொள்ளலாம்.