தினமணி 24.03.2013
துப்புரவுப் பணியாளர்களுக்கு இலவச சீருடை
கிருஷ்ணகிரி நகர்மன்றத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.
நகர்மன்ற அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு நகராட்சி ஆணையர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
நகர்மன்றத் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, துப்புரவுப் பணியாளர்களுக்கு இலவச சீருடை, காலனி ஆகியவற்றை வழங்கினார்.
விழாவில், சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.