தினமலர் 26.03.2013
தென்காசியில் 28ம் தேதி நகராட்சி கூட்டம்
தென்காசி:தென்காசியில் வரும் 28ம் தேதி நகராட்சி கூட்டம் நடக்கிறது.தென்காசி நகராட்சியின் சாதாரணக் கூட்டம் வரும் 28ம் தேதி காலை நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் பானு தலைமை வகிக்கிறார். துணைத் தலைவர் சுடலை, கமிஷனர் இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் 50 மன்றப் பொருட்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி நகராட்சி தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.