தினகரன் 27.03.2013
காந்திபுரம் பஸ் நிலையத்தில் மேயர், கமிஷனர் திடீர் ஆய்வு
காந்திபுரம் பஸ் நிலையத்தில் மேயர், கமிஷனர் திடீர் ஆய்வு
கோவை: கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் மேயர் செ.ம.வேலுசாமி, மாநகராட்சி கமிஷனர் லதா ஆகியோர் அதிகாரிகள் குழுவுடன் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டனர். பேருந்து நிலையத்தின் அனைத்து தளங்களிலும் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இலவச சிறுநீர் கழிப்பிடத்தில் தடையற்ற தண்ணீர் வசதி மற்றும் மின்விளக்கு வசதி அமைத்துக்கொடுக்க உத்தரவிட்டனர்.
மின்சேமிப்பை கருத்தில்கொண்டு சோலார் மின்விளக்குகளை பொருத்தவும் பரிந்துரைசெய்தனர். மழைநீர் வடிகால் சுத்தப்படுத்தவும், மூடி அமைக்காத இடத்தில் உடனடியாக மூடி அமைக்கவும், ஒவ்வொரு தளத்திலும் பயணிகள் அமர்வதற்கு வசதியாக கான்கிரீட் பெஞ்சுகள் அமைக்கவும் உத்தரவிட்டனர்.