தினமணி 09.04.2013
மாநகராட்சியில் இன்று குறை தீர் கூட்டம்
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொதுமக்களின் குறை தீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) நடைபெறுகிறது.
மேயர் எஸ். செüண்டப்பன் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்துக்கு ஆணையர் மா.அசோகன் முன்னிலை வகிக்கிறார்.
காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது பகுதி குறைகளை மனுவாகவோ, நேரிலோ சந்தித்து அளிக்கலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.