தினகரன் 27.04.2013
விதிமுறை மீறல் தெற்குமாசி வீதியில் 2 மாடி கட்டுமான பணிக்கு சீல் மாநகராட்சி நடவடிக்கை
மதுரை: தெற்குமாசி வீதியில் தரை தளத்துடன் 2 மாடி கட்டிடத்திற்கு அனுமதி வாங்கிக் கொண்டு கூடுதலாக அண்டர் கிரவுண்டில் 15 அடி ஆழத்துக்கு தோண்டி நடைபெற்று வந்த கட்டுமான பணியை நிறுத்தி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மதுரையில் நெருக்கடியான வீதிகளில் ஒன்று தெற்கு மாசி வீதி. இங்குள்ள தேவாங்கர் சத்திர வளாகத்தில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதற்காக உள்ளூர் திட்டக்குழுமம், மாநகராட்சி அனுமதி பெறப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 1 கி.மீ. சுற்றளவில் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடம் கட்ட தடை உள்ளது. இந்த விதிமுறைகளின்படி தரை தளத்துடன் கூடிய 2 மாடி வணிக வளாகம், ஒவ்வொரு தளமும் 4 ஆயிரத்து 50 சதுரஅடி வீதம் மொத்தம் 12 ஆயிரத்து 150 சதுரஅடி பரப்பில் கட்டிடம் கட்ட மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.
கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. கட்டிடம் விதிமுறைகளின்படி கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையர் நந்தகோபால் உத்தரவிட்டார்.
அதன்படி நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன், உதவி ஆணையர் தேவதாஸ் மற்றும் அதிகாரிகள் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அதன்படி நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன், உதவி ஆணையர் தேவதாஸ் மற்றும் அதிகாரிகள் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இதில் தரை தளத்துடன் 2 மாடி வணிக வளாகம் கட்டுதற்கு மாநகராட்சி அளித்த அனுமதி மீறப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கூடுதலாக அண்டர் கிரவுண்ட் கட்ட 15 அடி ஆழம் தோண்டப்பட்டு கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டது தெரியவந்தது. இதனால் கட்டுமான பணிக்கு தடை விதித்து, ஆணையர் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், Ôஅண்டர் கிரவுண்டுக்கு அனுமதியின்றி 15 ஆழத்துக்கு தோண்டியதால் மண் சரிந்து அதில் வேலை செய்யும் தொழிலாளருக்கு பாதுகாப்பற்ற நிலையும், சுற்றிலுமுள்ள பழமையான கட்டிடத்தின் ஸ்திர தன்மைக்கும், அதில் குடியிருப்போர் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையும் நிலவியது. எனவே சீல் வைக்கப்பட்டதுÕ என்றனர்.