தினமணி 06.05.2013
மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க மேயர் வேண்டுகோள்
பில்லூர் குடிநீர் திட்டத்தின் குழாய்கள் உடைப்பு சரிசெய்யப்பட்டு விட்டதால், குடிநீர் விநியோகம் செய்யும் வரை மாநகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மேயர் செ.ம.வேலுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது: பில்லூர் முதலாவது, இரண்டாவது குடிநீர் திட்டக் குழாய்களில் சமீபத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை.
இந்நிலையில் தற்போது அந்த உடைப்புகள் சரிசெய்யப்பட்டு விட்டன. ஆனால் குடிநீர் விநியோகம் செய்ய இன்னும் இரு நாள்கள் ஆகும். அதுவரை மாநகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.