பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க மக்கள் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டுகோள்
விழுப்புரம்:விழுப்புரத்தில் பாதாளசாக்காடை பணிகள் முடிவடைய பொதுமக்கள் பங்களிப்பு தொகையை விரைவாக செலுத்த வேண்டுமென சேர்மன் பாஸ்கரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.விழுப்புரம் நகராட்சியில் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு தொகை இணைந்து கடந்த 2008ம் ஆண்டு பாதாளசாக்கடை திட்ட பணிகள் துவங்கின. 35.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கிய பணிகளுக்கு, தற்போது திருந்திய நகராட்சி நிர்வாக அனுமதி மூலம் 43.36 கோடி ரூபாய் பெறப்பட்டது.
இதில் காகுப்பத்தில் 90 சதவீதம், எருமனந்தாங்கலில் 75 சதவீதம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் முடிந்தது. தற்போது இயந்திரங்கள் பொறுத்தும் பணி நடக்கிறது. இறுதி கட்டத்தில் உள்ள பணிகளை நேற்று சேர்மன் பாஸ்கரன் பார்வையிட்டு, மீதமுள்ள பணிகளின் நிலவரங்கள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.