திருப்பூர் மாநகர பகுதியில் மலிவு விலை உணவகம் கட்டும் பணி அமைச்சர் நேரில் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மலிவு விலை உணவகம் கட்டும் பணியை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேரில் ஆய்வு மேற் கொண்டார்.
மலிவு விலை உணவகம்
தமிழகத்தில் திருப்பூர் உள்பட 9 மாநகராட்சிகளில் மலிவு விலை உணவகம் திறக்க முதல்அமைச்சர் ஜெயல லிதா உத்தரவிட்டு இருந்தார். இதன்அடிப்படையில் திருப் பூர் மாநகராட்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகம் அமைக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதி யில் முதலாவது மண்டல அலுவலகம், ஆத்துப்பாளை யம், பாண்டியன்நகர், 15.வேலம்பாளையம் நக ராட்சி முன்னாள் அலுவலகம், குமரன் வணிக வளாகம், பழைய பஸ் நிலையம், சந்தைப் பேட்டை, சந்திராபுரம், நல்லூர், சின்னச்சாமி அம் மாள் பள்ளி அருகில் என 10 இடங்கள் தேர்வு செய்யப் பட்டு தற்போது மலிவு விலை உணவகத்துக்கு கட்டிடம் கட் டும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் ரூ.25 லட்சம் மதிப்பில் சமை யல் கூடம், டோக்கன் வினி யோகம் செய்யும் இடம், உணவு வினியோகம் செய்யும் இடம், உணவருந்தும் அறை ஆகியவை காற்றோட் டத்துடன் கட்டப்பட்டு வரு கிறது.
அமைச்சர் ஆய்வு
முதலாவது மண்டல அலு வலகம் அருகே மலிவு விலை உணவகம் கட்டும் பணியை நேற்று காலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மேயர் விசா லாட்சி, துணை மேயர் குண சேகரன், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், மாநகராட்சி கமிஷனர் செல்வ ராஜ், மாநகர பொறியாளர் ரவி ஆகியோர் ஆய்வு மேற் கொண்டனர்.
இதேபோல் மாநகராட்சி பகுதியில் கட்டப்பட்டு வரும் மலிவு விலை உணவு கட்டிட பணிகளை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச் சியில் முதலாவது மண்டல உதவி ஆணையாளர் சபி யுல்லா, கவுன்சிலர்கள் சுப்பு, சின்னச்சாமி, கல்பனா மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். மலிவு விலை உணவகம் வரு கிற 31ந் தேதி திறக்கும் வகையில் ஏற்பாடு நடந்து வரு வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.