தினத்தந்தி 31.05.2013
சுகாதார பணியாளர்களுக்கு சீருடை
திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் சுகாதார பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர பஞ்சாயத்து தலைவர் மு.சுரேஷ்பாபு தலைமை தாங்கி, சுகாதார பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார். நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் கொ.ராஜையா, சுகாதார ஆய்வாளர் பூவையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.