தினமணி 05.06.2013
குடிநீர் உறிஞ்சிய 15 மின் மோட்டார்கள் பறிமுதல்
குடியாத்தம் நகரில் வீட்டுக் குழாய்களில் பொருத்தி, குடிநீர் உறிஞ்சியதாக 15 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜி. உமாமகேஸ்வரி தலைமையில் குழாய் ஆய்வாளர் சேகர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் 29, 30-வது வார்டுகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் இதற்கான ஆய்வை மேற்கொண்டனர்.